states

img

ஜூலை 1-ஐ கருப்பு தினமாக மேற்கு வங்க பார் கவுன்சில் அறிவிப்பு!

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும் ஜூலை 1-ஆம் தேதியை கருப்பு தினமாக மேற்கு வங்க பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் - 1860, இந்திய சாட்சியச் சட்டம் - 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1983 ஆகிய சட்ட ங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றிற்கு மாற்றாக ஒன்றிய அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023 (இந்திய சிவில் பாது காப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா - 2023 (இந்திய நியாயச் சட்டம்), பாரதிய சாக்ஷிய அதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய மூன்று புதிய குற்ற வியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டங்களை ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து அமலாக்க உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஜூலை 1-ஆம் தேதியை கருப்பு தினமாக மேற்கு வங்க பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் பார் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் எவ்வித நீதித்துறை பணிகளையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.